

புளோரிடாவை சேர்ந்த பெண் ஒருவர், தங்கள் குடும்பத்தில் வளர்த்த நாயுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதை அந்த பெண்ணின் கணவர் கேமராவில் பதிவு செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
38 வயதான மாலியா நும்மர்டோர், தான் வளர்த்த நாயுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், அவரது கணவர் இந்த அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முகநூலில் பகிர்ந்ததோடு, அதை நிரூபிக்க தன்னிடம் புகைப்பட மற்றும் காணொளி ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சார்லட் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் குற்றப்பத்திரிகையில்படி, காவல்துறையினர் கணவரிடம் விசாரணை நடத்தியபோது, நாணயங்களை சேகரிக்கும் உண்டியல் ஜாடியிலிருந்து பணத்தை யார் திருடுகிறார்கள்? என்பதைக் கண்டறிய வீட்டில் இரண்டு பாதுகாப்பு கேமராக்களைப் பொருத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வீட்டில் கேமராக்கள் உள்ள விஷயம் அனைவருக்குமே தெரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், படுக்கையறை கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, நும்மெர்டோர் (அவரது மனைவி) தாங்கள் வளர்த்த நாயுடன் பாலியல் செயல்களில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது.
கணவர், அந்தப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளைப் புலனாய்வாளர்களுக்குக் காண்பித்ததுடன், அந்தக் காணொளிக் காட்சிகள் அடங்கிய மடிக்கணினியையும் சோதனை செய்ய அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து, செவ்வாயன்று காவல்துறை நும்மெர்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த வீடியோவில் தான் நாயுடன் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் எந்தவிதமான பாலியல் தொடர்பும் இல்லை என்றும், அதைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காவலர்கள் வீடியோவில் உள்ள செயல்களை நும்மர்டோரால் விளக்க முடியவில்லை. மேலும் அவரது பதில்கள் முரண்பாடாக இருந்ததாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். நும்மர்டோரின் முகநூல் சுயவிவரத்தில், அவர் 2023-ல் திருமணம் செய்துகொண்ட தன் கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் பல ஆண்டுகளாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இடப்பெற்றிருந்தன. மேலும், செவ்வாயன்று நும்மர்டோர் கைது செய்யப்பட்டு, சார்லட் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்