இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், அஜித்மோன் மற்றும் மஹந்த்ஷா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடனடியாக சிறையில் அடைத்தனர்.பெண்கள் இருவருரையும் காப்பகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால் வங்கதேச பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு நுழைந்ததால், அவர் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.