3 லட்சம் கொடுத்தால் மெடிக்கல் சீட்... மோசடி ஆசாமி கைது...

3 லட்சம் கொடுத்தால் மெடிக்கல் சீட்... மோசடி ஆசாமி கைது...

பிரபல மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on
விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர்  நௌசத்(48). இவரது நண்பர் வடிவேலு என்பவர் மூலம்  சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபதி என்பவர் நௌசத்துக்கு அறிமுகமானார். விழுப்புரத்தில் உள்ள வாகன விற்பனை நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஸ்ரீபதி, நௌசத்-ன் மகன் ஷாருக் என்பவருக்கு மெடிக்கல் சீட் வாங்கி தருவதாகக் கூறி கடந்த வருடம் அக்டோபர் மாதம் முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையைக் காட்டி 3 லட்சம் பெற்றுள்ளார். 8 மாதங்கள் ஆன நிலையில் மெடிக்கல் சீட்-ம் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஸ்ரீபதி ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து நௌசத் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெ.ஜெ நகர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஸ்ரீபதி-யை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் எந்தவித பதட்டமுமின்றி பணம் பெற்றது உண்மைதான், அதை திருப்பித்தர முடியவில்லை என்பதும் உண்மைதான் என  ஸ்ரீபதி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com