“பணம் கேட்டு தொல்லை செய்த கள்ள காதலன்” - திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலி.. கூலிப்படையை ஏவி கொலை செய்த கொடூரம்!

தொடர்ந்து திருமணத்திற்கு மறுத்த வந்த ஹரிஷ் பணம் கேட்டு மஞ்சுளாவை தொல்லை செய்து வந்திருக்கிறார்...
“பணம் கேட்டு தொல்லை செய்த கள்ள காதலன்” - திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலி.. கூலிப்படையை ஏவி கொலை செய்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதுடைய ஹரிஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை தலைவர் பிரசாந்த் என்பவருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கிறார். ஹரிஷிற்கு இன்னும் திருமணமாகாத நிலையில் ஓசூர் வானவில் நகரை சேர்ந்த 35 வயதுடைய மஞ்சுளா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

எனவே ஹரிஷ் அடிக்கடி தனது காதலி வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல் கடந்த இரண்டாம் தேதி இரவு ஹரிஷ், மஞ்சுளாவின் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் இரவு 9 மணி அளவில் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தபோது, அவரை வழி மறித்த மர்ம நபர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஹரிஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Admin

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மஞ்சுளாவை அழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரிஷ் மஞ்சுளாவிடம் அடிக்கடி பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 80 லட்சம் வரை மஞ்சுளா ஹரிஷுக்கு பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி ஹரிஷை தொந்தரவு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து திருமணத்திற்கு மறுத்த வந்த ஹரிஷ் பணம் கேட்டு மஞ்சுளாவை தொல்லை செய்து வந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா தனது காதலனை தீர்த்து கட்ட முடிவு செய்து கூலிப்படைக்கு பணம் கொடுத்து ஏவி விட்டிருக்கிறார். அதன்படி கடந்த (நவ 02) ஆம் தேதி இரவு ஹரிஷ் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மஞ்சுளா (35) மற்றும் ஓசூர் கும்பாரப்பேட்டையை சேர்ந்த மோனீஸ் (24) அலசநத்தம் பிஸ்மில்லா நகரை சேர்ந்த முகம்மது ரிகான் (21) தோட்டகிரியை சேர்ந்த முஜாமில் (21) பழைய மத்திகிரியை சேர்ந்த முஸ்ரப் (24) அவரது தம்பி சமீர் (21) மத்திகிரியை சேர்ந்த அபி (19) ஆகிய 7 பேரை ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மஞ்சுளா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com