பல்லடம் அடுத்த கெம்பெ நகர் அருகே சாலையோரத்தில் இருந்த சிறுவர்களிடம் குடிபோதையில் இருந்த ஆசாமி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக சென்ற பிரவீன் ராஜா என்ற கல்லூரி மாணவர் அந்த ஆசாமியை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தான் வைத்திருந்த கத்தியால் கல்லூரி மாணவரை சரமாரியாக குத்தியுள்ளார்.