“கள்ளக்காதலனை கொல்ல மகன்களை ஏவிய தாய்” - திட்டமிட்டு காத்திருந்த வாலிபர்கள்.. மாந்தோப்பில் நடந்த பயங்கரம்!

வேலை செய்யும் இடத்திற்கு வந்து சென்றுள்ளார் இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு மீறிய...
“கள்ளக்காதலனை கொல்ல மகன்களை ஏவிய தாய்” - திட்டமிட்டு காத்திருந்த வாலிபர்கள்.. மாந்தோப்பில் நடந்த பயங்கரம்!
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய ஜானகி. இவருக்கும் போச்சம்பள்ளியை சேர்ந்த 40 வயதுடைய முருகன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று மகன்கள் உள்ளனர். கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த முருகன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உடலநலக்குறைவால் உயிரிழந்தார். பின்னர் ஜானகி தனது மூன்று மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

அப்போது வேலைக்கு சென்ற இடத்தில் மத்தூரை சேர்ந்த 30 வயதுடைய ராஜதுரை என்பவருடன் ஜானகிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. டிம்பர் லாரி ஓட்டி வந்த ராஜதுரை அடிக்கடி ஜானகி வேலை செய்யும் இடத்திற்கு வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜானகியின் மகன்கள் படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

Admin

அடிக்கடி ஜானகி தனது காதலனுடன் ஊர் சுற்றி திரிந்ததை அறிந்த அவரது மகன்கள் இது குறித்து தனது தாயிடம் விசாரித்துள்ளனர். இதனால் எங்கு ராஜதுரையுடன் தான் தகாத உறவில் இருப்பது மகன்களுக்கு தெரிந்து விடுமோ என நினைத்து பயந்த ஜானகி தாது கள்ளக்காதலை கைவிட்டு மகன்களுடன் சென்னைக்கு சென்று வசித்து வந்திருக்கிறார். ஆனால் ஜானகியை பிரிய மனமில்லாத ராஜதுரை அடிக்கடி அவருக்கு போன் செய்து கிராமத்திற்க்கு வரும்படி தொந்தரவு செய்து வந்தார். இருப்பினும் ஜானகி தனது மகன்களுடன் சென்னையிலேயே தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சொத்து சம்பந்தமாக ஜானகி தனது மகன்களுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அறிந்த ராஜதுரை ஜானகியை நேரில் பார்க்க வேண்டும் என வற்புறுத்தி வந்த நிலையில் ராஜதுரையின் தொல்லையை தாங்க முடியாமல் அவரது மகன்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜானகியின் மூன்று மகன்களும் ராஜதுரையை கொல்ல நினைத்து அவரிடம் சமாதானமாக பேசி அருகில் உள்ள மாந்தோப்பிற்கு வரவழைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜதுரை அவர்களிடமிருந்து தப்பித்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com