காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் விபரீதம்.. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்! மரணத்தில் மர்மம் - சந்தேகிக்கும் உறவினர்கள்

துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவலளித்துள்ளார்.
love marriage tragedy
love marriage tragedy
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் விருப்பத்திற்கு மாறாக காதலித்து திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, தனது வாடகை வீட்டில் 28 வயதான இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவரான ஃபைசான், நவாடியா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஃபைசான் 22 வயதான ஜாஸ்மினைத் திருமணம் செய்துகொண்டு, சிபி கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் குடும்பத்தினரின் எதிர்ப்பினை மீறி நடந்த ஒரு காதல் திருமணம். காவல்துறையின் கூற்றுப்படி, ஃபைசான் சனிக்கிழமை இரவு உணவு உண்ட பிறகு உறங்கச் சென்றுள்ளார். அதே அறையில் உறங்கிக் கொண்டிருந்த ஜாஸ்மின், ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தபோது, ​​ஃபைசான் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவலளித்துள்ளார். பின்னர் ஜாஸ்மின் இந்தச் சம்பவம் குறித்து தனது குடும்பத்தினருக்கும் ஃபைசானின் உறவினர்களுக்கும் தெரிவித்ததை அடுத்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஃபைசானின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் அவரது திருமணத்தில் அதிருப்தி அடைந்து, அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஜாஸ்மினின் கூற்றுப்படி, தனது குடும்பத்தினருடனான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஃபைசானின் உறவினர்கள் அவரது மரணத்தின் சூழ்நிலைகள் குறித்துக் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவரது தலையிலிருந்து இரத்தம் வருவதாகவும், தற்கொலை அல்லாமல் இது வேறு ஏதேனுமா? என்பது குறித்து சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, ஆதாரங்களைச் சேகரித்து, குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக வட்ட அதிகாரி நிதின் குமார் தெரிவித்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே ஃபைசானின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை முடிவுகள், சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களைக் கருத்தில் கொண்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com