மேட்டுப்பாளையம் பழைய இரும்பு கடை அருகே தீ விபத்து..!

மேட்டுப்பாளையம் பழைய இரும்பு கடை அருகே தீ விபத்து..!
Published on
Updated on
1 min read

மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சாலையில் பழைய இரும்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு 500க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகின்றனர். 

இங்கு காலியிடத்தில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த பழைய கழிவுகளிலிருந்து திடீரென்று புகை வர ஆரம்பித்தது சிறிது நேரத்தில் கழிவு பொருட்கள் முழுவதும் எரியத் தொடங்கி அப்பகுதி முழுவதும் கருமூட்டமாக புகைகள் எழும்பின..

இதனால் அச்சமடைந்த அக்கம் பக்கம் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியே வந்து பார்க்கும்போது தீ அப்பகுதி முழுவதும் பரவி இருந்தது.. உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்பகுதியில் கடை அனைத்தும் விடுமுறை அளித்துள்ளதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தீ விபத்துக்கான காரணத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com