“கள்ளக்காதலனோடு உல்லாசத்தில் இருந்த இளம்பெண்” - இடையூறாக இருந்த 2 வயது குழந்தை… தாய் செய்த அதிரவைக்கும் சம்பவம்!

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களின் பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக...
“கள்ளக்காதலனோடு உல்லாசத்தில் இருந்த இளம்பெண்” - இடையூறாக இருந்த 2 வயது குழந்தை… தாய் செய்த அதிரவைக்கும் சம்பவம்!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், சித்ரா துர்கா மாவட்டம் ஹிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதுடைய ஐஸ்வர்யா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

தனியாக வசித்து வந்த ஐஸ்வர்யாவிற்கு ஹூவினாயோல் கிராமத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமான சந்திரப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களின் பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றி திரிந்த நிலையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் குழந்தையை வைத்து கொண்டு வெளியில் சுற்ற முடியவில்லை என ஐஸ்வர்யா சந்திரப்பாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் உல்லாசமாக இருக்கும் போதும் குழந்தை தொந்தரவாக இருப்பதாலும் இருவரும் சேர்ந்து குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி கோப்பா என்ற பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 50 ஆயிரத்திற்கு விலை பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த சில திணைக்கு முன்பு அவர்களிடம் குழந்தையை விற்பனை செய்திருக்கின்றனர்.

இதனை அறிந்த ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை விற்பனை செய்தது குறித்து குழந்தை நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குழந்தை நலத்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யாவை கைது செய்த நிலையில் கள்ளக் காதலன் சந்திரப்பா தப்பி ஓடியுள்ளார். 2 வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com