"மாணவியுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியர்.." ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு! டைரி குறிப்பு மூலம் கண்டுபிடித்த பெற்றோர்

மாணவியிடம் பாலியல் செயல்களில் ஈடுபடும்போது புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டதாகவும்..
Florida music teacher arrested
Florida music teacher arrestedFlorida music teacher arrested
Published on
Updated on
1 min read

பெற்றோர் தங்களது மகளின் ரகசிய நாட்குறிப்பைப் படித்ததை அடுத்து, ஓர் ஆசிரியர் தனது மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் பெற்றோர் காவல்துறையிடம் குற்றம் சாட்டியுள்ளனர்.

51 வயதான டேவிட் சோமர், புளோரிடாவின் நார்த் போர்ட் உயர்நிலைப் பள்ளியில் இசைக்குழுவிற்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அங்கு, ஒரு சிறுமியிடம் அவர் தகாத மற்றும் காமவெறியுடன் நடந்துகொண்டது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளுக்காக தற்போது அவர் கைது செய்துள்ளார். சோமருக்கும், அந்த மனைவிக்கும் இடையே பலமுறை பாலியல் தொடர்பு நிகழ்ந்ததாக நார்த் போர்ட் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அவரது கற்பித்த ஒரு முகாமில் அந்தச் சிறுமி கலந்துகொண்டிருந்தபோது, ​​அந்த மாணவியின் தொலைபேசி எண்ணைப் பெற்று கொண்டுள்ளார். மேலும், 2025-ம் ஆண்டின் கோடையில் அந்த மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாதாரண அன்றாட விஷயங்களைப் பற்றி பேசும் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவை பின்னர் தனிப்பட்டவையாகவும் பாலியல் ரீதியானவையாகவும் மாறியதாகவும் அந்த மாணவி புலனாய்வாளர்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. பிரமாணப் பத்திரத்தின்படி, சோமர் அந்த மாணவியிடம் பாலியல் செயல்களில் ஈடுபடும்போது புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டதாகவும், பின்னர் மார்ச் 2026-ல் அந்த உறவு உடல்ரீதியானதாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் பெற்றோர், அவரது நாட்குறிப்பைப் படித்த பின்னரே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்னாள் மாணவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளனர். அந்த மாணவர்களில் ஒருவர், "சில சமயங்களில், நாங்கள் மேடையில் இருக்கும்போதெல்லாம், அவர் எங்களிடம் இப்படிச் செய்வார். என்னிடம் எப்போதும் அப்படித்தான் செய்வார். என்னையும் இன்னொரு பெண்ணையும் திருத்த முயற்சி செய்து, எங்கள் மீது சாய்வார், தொட்டுப் பழகுவார். அவர் சுற்றிச் சுற்றி வந்து, பாடகர் குழுப் பெண்களின், குறிப்பாகப் பெண்களின் தொலைபேசி எண்களைக் கேட்பார். 'அதன் மூலம் கச்சேரி மற்றும் உடை சம்பந்தமாக நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியும்' என்று சொல்வார்," என ஒரு மாணவி நினைவுகூர்ந்தார். தற்போது அந்த இசை ஆசிரியர் சிறையில் உள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com