
பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய பாரதி. இவர் அதே பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி 26 வயதுடைய சுவேதா இவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பாரதி குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் வேலை முடித்து விட்டு தினந்தோறும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து சென்று குடித்துவிட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுவேதா பாரதியை குடிக்க வேண்டாம் என கண்டித்தார். இருப்பினும் பாரதி தொடர்ந்து குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாரதியை பிரிந்து கடந்த 6 மாதங்களாக குழந்தைகளுடன் ஏபிடி ரோடு பழனியப்பா வீதியில் ஸ்வேதா வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி சுவேதாவிடம் சென்று “நான் திருந்தி விட்டேன் இனிமேல் குடிக்க மாட்டேன்”என கூறி அவருடன் தங்கியுள்ளார்.
மேலும் சுவேதா அங்குள்ள பிளாஸ்டிக் கடையில் பணிபுரிந்து வந்த நிலையில் சுவேதா மீது சந்தேகப்பட்டு பாரத் அவரிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இன்று காலை பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைக்கு சுவேதாவை விட பாரதி உடன் சென்ற நிலையில் வழியில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த கணவன் பாரதி சுவேதாவை கத்தியால் சராமாரியாக குத்தி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த சுவேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தப்பித்து செல்ல முயற்சித்த பாரதியை பிடித்து வைத்திருந்தனர், இதனை தொடர்ந்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பாரதியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவனே நடுரோட்டில் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.