“சீரழிந்த ஆசிரியையின் வாழ்க்கை” - தந்தை மற்றும் மகனின் இச்சைக்கு பலியான பல பெண்கள்.. பள்ளி தாளாளர் செய்த கொடூரம்!

தனியார் பள்ளி தாளாளர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருணை இல்லம் மாணவிகளிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டதாக..
“சீரழிந்த ஆசிரியையின் வாழ்க்கை” - தந்தை மற்றும் மகனின் இச்சைக்கு பலியான பல பெண்கள்.. பள்ளி தாளாளர் செய்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதுடைய ராஜவேல். இவரது மகள் 35 வயதுடைய ராதிகா, இவர் விருத்தாசலம் அருகே உள்ள வீரா ரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் திடீரென ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனை தொடர்ந்து ராதிகாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராதிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்...? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் ராதிகா பணிபுரிந்து வந்த தனியார் பள்ளியின் தாளாளர் மகனான பிரின்ஸ் நவீனும் ராதிகாவும் கடந்த 10 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கின்றனர். மேலும் தாளாளரின் மகன் பிரின்ஸ் நவீன் ஆசிரியை ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Admin

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரின்ஸ் நவீன் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது தெரிவந்துள்ளது. ராதிகா பணிபுரிந்த தனியார் பள்ளி தாளாளர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருணை இல்லம் மாணவிகளிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி போக்சோ சட்டத்தில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவரது மகனும் இதே போல் பள்ளியில் பணி செய்யும் ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், வறுமையில் உள்ள ஆசிரியைகளை ஆசை வார்த்தைகள் கூறி சீரழித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தாளாளரின் மகன் பிரின்ஸ் நவீனை மங்கலம்பேட்டை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Admin

தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, மேலும் மாவட்ட நிர்வாகம், பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு உள்ள அந்த தனியார் கல்வி நிறுவனத்தின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாய் கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com