ஹோட்டல் பெயரில் இயங்கி வந்த 'விபசார விடுதி'! போலீசாரின் அதிரடி சோதனையில் மீட்கப்பட்ட 5 பெண்கள் - திடுக்கிடவைக்கும் உண்மை சம்பவம்

ரகசியமாக காவல்துறை இரவில் ஒரு போலி வாடிக்கையாளரை அந்த ஹோட்டலுக்கு அனுப்பியது..
prostitution case
Published on
Updated on
1 min read

வாலுஜ் பகுதியில் உள்ள ஒரு பாலியல் விடுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் 5 பெண்களை மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த நள்ளிரவு நடவடிக்கையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பாஜி நகரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகரின் MIDC வாலுஜ் பகுதியில், ஒரு ஹோட்டல் இயங்கிவந்தது. ஆனால் ஹோட்டல் என்ற போர்வையில் ஒரு பெரிய விபச்சார விடுதிதான் நடத்தப்பட்டுவந்துள்ளது. காம்கர் சௌக்கில் உள்ள 'நந்தினி ஹோட்டலில்' இயங்கி வந்த இந்த விபச்சாரம் நடக்கும் இடத்திற்கு போலீசார் நள்ளிரவில் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையில், ஹோட்டல் மேலாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 பெண்கள் இந்த கொடுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நந்தினி ஹோட்டலுக்குப் பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துவந்து, பாலியல் தொழிலுக்காக விற்கப்படுவதாக, குற்றப்பிரிவின், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைச் சரிபார்க்க, ரகசியமாக காவல்துறை இரவில் ஒரு போலி வாடிக்கையாளரை அந்த ஹோட்டலுக்கு அனுப்பியது. குற்றம் நடப்பது உறுதி செய்யப்பட்டதும் உடனடியாக சிக்னல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறை அந்த ஹோட்டலில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த நடவடிக்கையில், ஹோட்டல் மேலாளர் சச்சின் பகவான் கோசவி (30), நிதின் பகவான் கோசவி (32) மற்றும் ஹோட்டல் உரிமையாளர் உமேஷ் ராவ்சாஹேப் ஆம்லே ஆகியோர் மீது MIDC வாலுஜ் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய இந்த சோதனையில் 3 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட பாதிக்கப்பட்ட 5 பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் ஜெகந்நாத் மென்குடாலேவின் கூற்றுப்படி, "ஒரு போலி வாடிக்கையாளரை அனுப்பி காவல்துறையினர் இந்தச் சம்பவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சாட்சிகள் முன்னிலையில், அந்தப் போலி வாடிக்கையாளரிடம், குறிப்பிட்ட குறியீடுகள் இடப்பட்ட பணத்தாள்கள் கொடுக்கப்பட்டு, தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டார். அந்த போலி வாடிக்கையாளர் ஒரு பெண்ணுக்காக ரூ.1,500 செலுத்தி, ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக அந்த விடுதியில் சோதனை நடத்தி, மேலாளரையும் விடுதி உரிமையாளரையும் கைது செய்தனர்" என்று கூறியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com