லைக்குக்காக நடுரோட்டில் ஸ்டண்ட்.... 

லைக்குக்காக நடுரோட்டில் ஸ்டண்ட்.... 
Published on
Updated on
1 min read

லைக்குக்காக நடுரோட்டில் ஸ்டண்ட் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர்கள் போலீசாரிடம் பிடிப்பட்டனர்.

தவறுதலாக செய்துவிட்டோம், இனி இப்படி செய்யமாட்டோம் என வாலிபர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியீடு.

சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள சாலையில், வாகன ஓட்டிகள் முன்பு நடுரோட்டில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் ஸ்டண்ட் செய்த அந்த வாலிபரை போக்குவரத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

குறிப்பாக வீடியோவில் பதிவான முக அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தி, ஸ்டண்ட் செய்த வாலிபர் மற்றும் வீடியோ பதிவு செய்த வாலிபர் என மொத்தம் 3 பேரை போலீசார் பிடித்தனர். 

பிடிப்பட்ட அந்த இளைஞர்கள் தெரியாமல் லைக்குக்காக செய்துவிட்டதாகவும், இனி இதே போன்று செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டனர்.  மேலும் யாரும் இது போன்று பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர். 

இதனையடுத்து போலீசார் அந்த மூன்று இளைஞர்களையும் எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com