திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பிரதான சாலையில் பரபரப்பு...

கோயம்பேடு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பிரதான சாலையில் பரபரப்பு...

சென்னை | போக்குவரத்து அதிகமாக உள்ள சென்னை கோயம்பேடு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் காரை விட்டு வெளியேறிய நிலையில், கார் மளமளவென எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனால் காற்றில் வேகத்தால் மளமளவென பரவியது. இந்த தீ விபத்தால் பிரதான சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com