“ட்ரீட்மென்ட் சொல்லுங்க..!" அடுத்த நொடியே அந்தரங்க உறுப்புகளை காட்டி ஆபாச வீடியோ - 10 பெண் பிசியோதெரபிஸ்டுகளுக்கு தொல்லையா?

தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சனை குறித்த விவரங்களுடன், தனது அந்தரங்க உறுப்புகளைக் காட்டிய ஆபாசமான காணொளியையும் அனுப்பி வைத்துள்ளார்.
female physiotherapists harassment
female physiotherapists harassment
Published on
Updated on
2 min read

சூரத்தைச் சேர்ந்த பெண் பிசியோதெரபிஸ்டுகள் 10 பேரிடம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் தங்களுக்கு செல்போன் மூலம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டினை வைத்துள்ளனர். மேலும் அந்த நபர், அந்த பெண் பிசியோதெரபிஸ்ட்களுக்கு ஆபாசமான வீடியோக்களை அனுப்பி, பிசியோதெரபி சிகிச்சை செய்யுமாறு கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 15 நாட்கள் தொடர்ந்த இந்தத் தொல்லையைத் தொடர்ந்து வந்ததால், 'சூரத் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் சங்கம்' உதவிக்காக 'சூரத் சைபர் குற்றப் பிரிவு' காவல்துறையை தொடர்புகொண்டுள்ளனர். மேலும், பிசியோதெரபி சிகிச்சையாளர்களில் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, தொழில்நுட்பப் பகுப்பாய்வின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்காக மகாராஷ்டிராவிற்கு ஒரு குழு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. புகாரின்படி, ஜூலை 24 அன்று பணியில் இருந்த பிசியோதெரபிஸ்ட்டுக்கு, துஷார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், எலும்பியல் மருத்துவரான தனது உறவினர் ஒருவர் பிசியோதெரபி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், தனது மருத்துவ விவரங்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் அந்த பிசியோதெரபி சிகிச்சையாளரிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த நபர், தனது பெயர், முகவரி மற்றும் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சனை குறித்த விவரங்களுடன், தனது அந்தரங்க உறுப்புகளைக் காட்டிய ஒரு ஆபாசமான காணொளியையும் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவர், தனது உடலில் ஏற்பட்டுள்ள வலிக்கு இணையவழி சிகிச்சை அளிக்குமாறு பிசியோதெரபி சிகிச்சையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் சிகிச்சையாளரோ ஒரு ஆண் பிசியோதெரபி மருத்துவரை அணுகுமாறு அவரை அறிவுறுத்தியுள்ளார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து ஆபாசப் படங்களை அவருக்கு அனுப்பி, சிகிச்சை அளிக்குமாறு அவரை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இறுதியில் அந்த சிகிச்சையாளர் அந்த நபரின் எண்ணை பிளாக் செய்துள்ளார். ஆனால், பல பெண் பிசியோதெரபி சிகிச்சையாளர்கள் இதேபோன்று குறிவைக்கப்படுவதை அறிந்து பிசியோதெரபி சங்கத்தின் நிர்வாகிகள், இணையக் குற்றப் பிரிவு காவல்துறையை அணுகியுள்ளனர். பிசியோதெரபி சிகிச்சை மற்றும் ஆலோசனை கோருவதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர் பெண் மருத்துவர்களுக்கு ஆபாசமான காணொளி மற்றும் குரல் அழைப்புகளை அனுப்புவதாக அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர், புகார் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் வாட்ஸ்அப் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளில் இருந்து கிடைத்த விவரங்களைக் கொண்டு தொழில்நுட்பப் பகுப்பாய்வு செய்து, சந்தேக நபரை மகாராஷ்டிராவில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்காக ஒரு குழு அனுப்பப்பட்டது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com