
தஞ்சாவூர் மாவட்டம், விளார் சாலை தில்லை நகர் பகுதி பாரதிதாசன் நகர் முதல் தெருவைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பவரின் மகன் 22 வயதான திலகன். இவரும் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சக்தி என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே விளையாட்டாக ஆட்டோ ஓட்டுவது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் உடனிருந்த நண்பர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திலகன், தனது நண்பர் பாரதிதாசன் நகர், முதல் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் 21 வயதான சசிகுமார் அழைத்துக் கொண்டு கடந்த (செப் 9) ஆம் தேதி கலைஞர் நகர் முதல் தெருவுக்கு சென்று உள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். பின்னர் அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து இளைஞர்களை விலகி விட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சசிகுமாரின் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடிய இளைஞர்கள் அவர் அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். சசிகுமார் அவரது வீட்டிற்கு தனியாக சென்ற நிலையில் அதனை அறிந்து கொண்ட எதிர் தரப்பினர் சசிகுமாரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். சசிகுமாரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வல்லம் டிஎஸ்பி., கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரா நகரைச் சேர்ந்த சக்தி, கோகுல், ராஜா, பிரபா, சஞ்சய் உட்பட 11 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2) ல் இந்திரா நகர் பிரபு என்பவரின் மகன் ஹரிஹரன் (எ) சக்தி (20), அவரது தம்பி கோகுல் (19), அண்ணாநகர் 10ம் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சஞ்சய் (19), இபி காலனி செந்தமிழ் நகர் ராஜா என்பவரின் மகன் பிரபாகர் (20) ஆகிய 4 பேரும் சரண் அடைந்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.