அதேபோல சிவசங்கர் பாபா-விற்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் 5 பேருக்கு, நேற்று விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதிலும் அவர்கள் ஆஜராகாவிட்டால், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.