பிரசாதம் தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்!!கோவில் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்...

கோவிலுக்கு சென்ற சிறுமியை பிரசாதம் தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பாட்னாவில் அரங்கேறியுள்ளது.
பிரசாதம்  தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்!!கோவில் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்...
Published on
Updated on
1 min read

ஒடிசா மாநிலம் பலசுரே மாவட்டம் சோரா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தனது கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். 

அப்போது, அந்த சிறுமி தனியாக வந்திருப்பதை அறிந்த 52 வயது மர்ம நபர் ஒருவர் கோவிலில் பிரசாதம் வாங்கித் தருவதாக கூறி சிறுமியை கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்றுள்ளார்.

இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த மர்மநபர் அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பிய அந்த சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிறுமியின் குடும்பத்தார் இந்த சம்பவம் தொடர்பாக  அளித்த புகாரின் பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த 52 வயது மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்,  இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், அந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com