குடும்ப பிரச்சினையில் மாமனார் குத்தி கொலை - மனைவி, மாமியார் மருத்துவமனையில் அனுமதி!!

தேவகோட்டை அருகே தளக்காவயலில் குடும்ப பிரச்சனை காரணமாக மாமனார் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினையில்  மாமனார் குத்தி கொலை - மனைவி, மாமியார் மருத்துவமனையில் அனுமதி!!
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், தளக்காவயல் சமத்துவபுரத்தில் உள்ள பூமிநாதன் என்பவரது மகள் செல்விக்கும், பாலு என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே செல்வியும் பாலுவும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து கடந்த ஆறு மாதங்களாக செல்வி தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாலு மது அருந்திவிட்டு சென்று தனது மனைவியையும் மகனையும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பாலு, பூமிநாதனை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதனை தடுக்க சென்ற மனைவி மற்றும் மாமியாரையும் கத்தியால் குத்தியதால் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com