தாம்பரம் பகுதியில் வெகுஜோராக நடக்கும் லாட்டரி சூதாட்டம் : வீடியோ வெளியாகி பரபரப்பு‘

தாம்பரம் அருகே படு ஜோராக நடந்து வரும் லாட்ரி சூதாட்டம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பகுதியில் வெகுஜோராக நடக்கும் லாட்டரி சூதாட்டம் :  வீடியோ வெளியாகி பரபரப்பு‘
Published on
Updated on
1 min read

சென்னை தாம்பரம் நீதிமன்றம் அருகே அமைந்துள்ள கட்டிடம் முதல் மாடியில் ஜானகிராமன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு சூதாட்டத்தை  சட்டவிரோதமாக நடத்தி வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த கும்பல் முகவரி இல்லாத பில் புக்கை வைத்து கொண்டு, இரண்டாம் எண் மூன்று எண் லாட்டரி டிக்கெட் சூதாட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் குறிப்பிட்ட இலக்கு நம்பரை கூறிய பிறகு சூதாட்டம் நடத்தும் கும்பலிடம் பணம் செலுத்துவர். இதையடுத்து பணம் கொடுத்த நபர்களுக்கு டோக்கன்கள் வழங்குப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த லாட்டரி விற்பனையானது காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுவதாகவும்.. இதனால் பல நபர்கள் பணம் இழந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல உயிர்கள் பலிவாங்கிய நிலையில் தான் தமிழக அரசு சூதாட்டத்திற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்பரம் காவல் ஆணையாளர் அமுல்ராஜ் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com