“கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த மகள்” - சமாதானம் செய்ய அழைத்து சென்ற தந்தை.. பூச்சி மாத்திரை கொடுத்து கொலை செய்த பின்னணி!

கடந்த பத்து வருடங்களாக இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
theni murder
theni murdertheni murder
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம், சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா என்பவரின் மகள் பிரவீனா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் பிரவீனாவுக்கு போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே குழந்தையை கணவனிடம் விட்டு விட்டு பிரவீனா மாசு காளையுடன் சென்று கடந்த பத்து வருடங்களாக இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் பிரவீனாவிற்கும் மாசு காளைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் பிரவீனாவிற்கு திருப்பத்தூரை சேர்ந்த வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த மாசு காளை பிரவீனாவை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீனா தனது தந்தை வீட்டிற்கு சென்று காதலன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் மாசு காளையை வந்து கண்டிக்குமாறு தனது தந்தை தங்கையாவை அழைத்துள்ளார். ஏற்கனவே மகனுக்கும் பிரவீனாவின் தகாத உறவால் திருமணமாகாத விரக்தியில் இருந்த தங்கையா இதை கேட்டு மேலும் கோபம் அடைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிரவீனா திருப்பத்தூரை சேர்ந்த வாலிபருடன் பழகி வருவதை அறிந்த தங்கையை தனது மகளை கொலை செய்ய முடிவு செய்து பிரவீனாவை திருப்பூருக்கு அனுப்பிவைப்பதாக சொல்லி தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் போடி சாலையில் உள்ள பங்காரு குளத்தின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு தான் மறைத்து வைத்திருந்த தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை வலுக்கட்டாயமாக பிரவீனாவுக்கு கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் பிரவீனா மாத்திரையை சாப்பிட மறுத்த நிலையில் அவர் அணிந்திருந்த துப்பட்டாவை பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்து தங்கையா கொலை செய்துள்ளார்.

பின்னர் கொலை செய்ததை யாரும் கண்டுபிடிக்க கூடாது என பிரவீனாவின் உடலை சுற்றி பூச்சி மாத்திரைகளை போட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். காலையில் பிரவீனாவின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரவீனாவின் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்துள்ளனர். பின்னர் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் தங்கையாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பெற்ற மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com