“கால் சவரன் நகைக்காக கொல்லப்பட்ட முதியவர்” - இரண்டு பணத்தை வைத்து பார்ட்டி செய்த வாலிபர்கள்.. கோவில் புதரில் இருந்த சடலம்!

அப்போது இவரை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தினேஷ் மற்றும் பிரவீன் குமார்...
“கால் சவரன் நகைக்காக கொல்லப்பட்ட முதியவர்” - இரண்டு பணத்தை வைத்து பார்ட்டி செய்த வாலிபர்கள்.. கோவில் புதரில் இருந்த சடலம்!
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள குடியாந் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் 89 வயதுடைய முதியவர் மன்னார்சாமி. இவர் மனைவி மற்றும் மகன் உள்ள நிலையில் மகன் குடும்பத்துடன் கணவன் அண்ணாவி இருவரும் தங்கி வீட்டில் வசித்து வந்தனர். வீட்டில் இருக்கும் மன்னார்சாமி காலையில் குளித்துவிட்டு வீட்டில்சாமிக்கு பூஜை செய்து பின்னர் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று பூப்பறித்து வேண்டுதல் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த (நவ 13)ஆம் தேதி காலையில் குளித்துவிட்டு வழக்கம் போல வீட்டில் பூஜை செய்துவிட்டு அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அங்கேயே அமர்ந்திருந்தார் என சொல்லப்படுகிறது. அப்போது இவரை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தினேஷ் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் முதியவர் கையில் இருந்த இரண்டு கிராம் தங்க மோதிரத்தை பறிப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளனர்.

எனவே மன்னார்சாமியிடம் நைசாக பேசி அருகில் உள்ள புதரில் அழைத்துச் சென்று அவரை தாக்கி மோதிரத்தை பறிக்க முயறசிஜி செய்தனர். அப்போது முதியவர் மோதிரத்தை விடாத நிலையில் அவரை சரமாரியாக அடித்து படுகொலை செய்து கையில் இருந்த இரண்டு கிராம் தங்க மோதிரத்தை பறித்து சென்றனர். கோவிலுக்கு சென்று நீண்ட நேரமாகியம் முதியவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை ஊர் முழுக்க தேடி பார்த்துள்ளனர்.

பின்னர் மன்னார்சாமி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து தூசி காவல் நிலையத்தில் முதியோரை காணவில்லை என புகாரின் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மற்றும் ஊர் மக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்போது அம்மன் கோயில் அருகே உள்ள புதரில் முதியவர் சடலமாக கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரதேச பரிசோதனை செய்ததில் மூக்கில் எலும்பு உடைந்து ரத்த காயம் ஏற்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது இளைஞர் இருவர் இரண்டு கிராம் தங்கத்தை பக்கத்து ஊரில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து இரண்டு நாட்கள் ஜாலியாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் சந்தேகத்திற்கு இடமான இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் படுகொலை சம்பவத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com