கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துகொண்டு, திருத்தணி வனத்துறை அதிகாரிகளிடம் இப்படிப்பட்ட சொகுசு கார், பிடிபட்ட 3 வாலிபர்கள், பிடிபட்ட செம்மரக்கட்டை, ஆகியவற்றை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திருத்தணி வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் கனகம்மாசத்திரம் போலீசார் 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பிடித்தனர் தற்போது இந்த மாதமும் செம்மரக்கட்டை ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வந்தது தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர்.