பட்டாக்கத்தியுடன் திரிந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது

பட்டாக்கத்தியுடன் திரிந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது
Published on
Updated on
1 min read

சென்னை பாரிமுனையில் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த மாநில கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பாரிமுனை ராஜாஜி சாலை- கடற்கரை பேருந்து நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்களான லோகேஷ் ,சாமுவேல், ஸ்ரீகாந்த் ஆகியோர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்குவதற்காக பட்டா கத்தியுடன் காத்திருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பின் ஆயுத தடைச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்த வடக்கு கடற்கரை போலீசார் மாணவர்களின் பெற்றோருக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு;ம தகவல் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com