இந்திய சுதந்திர போராட்ட வீரர்களும் தலிபான்களும் ஒன்னா..? எம்.பி மீது வழக்கு!

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலிபான்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததற்காக சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷஃபிகுர் பார்க் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களும் தலிபான்களும் ஒன்னா..?  எம்.பி  மீது வழக்கு!
Published on
Updated on
1 min read

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலிபான்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததற்காக சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷஃபிகுர் பார்க் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய திருநாட்டை போராடி மீட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன், ஆப்கன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்களுடன் ஒப்பிட்டு சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷஃபிகுர் பார்க் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஆட்சியை கைப்பற்றியதற்கான தலிபான்களுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் எம்.பி ஷஃபிகுர் பார்க் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு உத்திர பிரதேச துணை முதல்வர் கே.பி. மவுரியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலிபான்களை ஒப்பிட்டு பேசியது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷஃபிகுர் பார்க் மீது உத்திர பிரதேச காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com