

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய வேலு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 12 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக வேலுவின் மனைவி தனது கணவரை பிரிந்து இளைய மகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். எனவே 12 வயதான மூத்த மகள் அவரது தந்தை பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
12 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான வேலு அடிக்கடி தனது மகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தந்தையின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலு கடந்த (அக் 27) ஆம் தேதி மகளை அழைத்துக் கொண்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸிலேயே தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை பார்த்த சக பயணிகள் வேலுவை அடித்து நடுவழி இறக்கி விட்டனர்.
பின்னர் அந்த சிறுமியை உறவினிடம் ஒப்படைக்க முயற்சி செய்தபோது சேலத்தில் உள்ள முகவரி சிறுமிக்கு தெரியாததால் அங்குள்ள கிறிஸ்தவ சபையின் காப்பத்தில் ஒப்படைத்துச் சென்றனர். இதையடுத்து காப்பகத்தின் நிர்வாகியான கிறிஸ்தவ சபையின் பாஸ்டர் சிறுமியிடம் விசாரித்தபோது கொடூர தந்தையின் வெறிச்செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் கிறிஸ்தவ சபையில் பாஸ்டர் சிறுமியை அழைத்துக் கொண்டு துவாக்குடி பகுதிக்கு வந்துள்ளார்.
அங்குள்ள சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் நடந்த விவரத்தை கூறவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வேலுவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெற்ற மகளிடமே கத்தியை காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூர தந்தையின் இத்தகைய செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.