தள்ளுவண்டியில் பிணமாக கிடந்த சிறுவன்... சி.சி.டி.வி. காட்சியால் திடீர் திருப்பம்...

விழுப்புரத்தில் இரண்டு நபர்கள் சிறுவனை தூக்கி சென்று தள்ளுவண்டியில் போட்டுவிட்டுச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளுவண்டியில் பிணமாக கிடந்த சிறுவன்... சி.சி.டி.வி. காட்சியால் திடீர் திருப்பம்...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் மேல்தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்திரி தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் பிணமாக கிடந்தான். அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன் என்ற விபரம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில், உணவு இல்லாமல் பட்டினியால் அவன் இறந்திருப்பது தெரியவந்தது.

சிறுவன் அணிந்திருந்த ஆடைகளை பார்க்கும்போது, அரசு அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஆடை என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசாரிடம், தற்போது சி.சி.டி.வி. பதிவு கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு நபர் சிறுவனை தோளில் சுமந்து செல்வதும், அவருடன் மற்றொருவர் செல்வதும் பதிவாகி உள்ளது. இதன் மூலம் அவர்கள் இருவரும் சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச் சென்றது உறுதியாகி உள்ளது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல், இந்த சிறுவனை தனிமைப்படுத்தி உணவு கொடுக்காமல் வைத்திருந்து, இறந்த பின்பு தள்ளுவண்டியில் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநில போலீசாருக்கு சிறுவனின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com