மனைவியை கொன்றும் ஆத்திரம் அடங்காத கணவன்.. பிணத்தை கூட விட்டு வைக்காமல்!

விஜயசாந்தியை பள்ளிகொண்டாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரவிக்குமார் அழைத்து
ravikumar and vijayasanthi
ravikumar and vijayasanthi
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள பள்ளிகொண்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ரவிக்குமார்(வயது 30), இவருக்கும் ஓதியத்தூர் பகுதியை சேர்ந்த விஜயசாந்தி என்ற பெண்ணிற்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ரவிக்குமாருக்கு விஜயசாந்தி நடத்தையின்  மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் இதனை காரணமாக வைத்து நேற்று இரவும் ரவிக்குமார் சண்டையிட தொடங்கியுள்ளார்.

நேற்று இரவு நடந்த சண்டை மற்ற சண்டைகளை போல முடியாமல், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் பெருகியுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் விஜயசாந்தி மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் விஜயசாந்தியை பள்ளிகொண்டாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரவிக்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு விஜயசாந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத ரவிக்குமார் மருத்துவமனையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து விஜயசாந்தி உடலை குத்தி இருக்கிறார்.

இதனை பார்த்து பதட்டமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சேட்டு உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து ரவிக்குமாரை கைது செய்துள்ளனர்.மேலும் இது குறித்து ரவிகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த பின்பும் விடாமல் கத்தரிக்கோலால் கணவன் தாக்கியது.அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com