கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி? வேறு மாநிலத்தில் புதைக்கப்பட்ட உடல்! 8 மாதங்களுக்குப் தோண்டி எடுப்பு

கணவர் மாயமானதாக போலீசில் புகார் அளித்த மனைவியே..
Hyderabad woman, lover kill husband
Published on
Updated on
2 min read

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து, அவரது உடலை மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் ரகசியமாக புதைத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்கள் நீடித்த தொழில்நுட்ப விசாரணைக்குப் பிறகே இந்த கொலை வழக்கின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசார் தெரிவித்த தகவலின் படி, ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்டயா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். அவரது மனைவி சத்யவதி, கணவர் காணவில்லை என்று மியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் முதலில் காணாமல் போனவர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணை நீண்ட நாட்களாக எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில், போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்களை தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினர். சத்யவதியின் செல்போன் அழைப்புப் பதிவுகள் (CDR), இருப்பிடத் தகவல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, சத்யவதி தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், இருவரும் இணைந்து கொலை செய்ய திட்டமிட்டு செயல்பட்டதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், கணவர் பெண்டயாவைக் கொலை செய்ய சத்யவதி தனது காதலனுடன் இணைந்து சதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பின்னர், சம்பவத்தை மறைக்கும் நோக்கில் உடலை ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிர மாநில எல்லைக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்கு கொண்டு சென்று ரகசியமாக புதைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், மியாபூர் போலீசார் மகாராஷ்டிர காவல்துறையின் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, நீதிமன்ற அனுமதியுடன் புதைக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகே, காணாமல் போனதாகக் கருதப்பட்ட பெண்டயா கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சத்யவதியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையில் அவரது காதலரின் பங்கு என்ன, கொலைக்கான திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது, இந்தச் சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கணவர் மாயமானதாக போலீசில் புகார் அளித்த மனைவியே, பின்னணியில் கொலை சதிக்கு மூளையாக இருந்ததாக போலீசார் சந்தேகிப்பது இந்த வழக்கை மேலும் பரபரப்பாகியுள்ளது. தொழில்நுட்ப ஆதாரங்கள், அழைப்புப் பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் பல மாதங்களுக்குப் பிறகு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருப்பது, குற்ற விசாரணையில் நவீன தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com