வாட்சப்பில் இளம்பெண் வைத்த ஒரு ஸ்டேட்டஸால்...அநியாயமாக தாய் அடித்துக்கொலை!!

இளம்பெண் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்சப்பில் இளம்பெண் வைத்த ஒரு ஸ்டேட்டஸால்...அநியாயமாக தாய் அடித்துக்கொலை!!
Published on
Updated on
1 min read

மராட்டிய மாநிலம் மும்பையின் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் லிலாவதி தேவி பிரசாத். இவருக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் லிலாவதியின் மகள் நேற்று முன் தினம் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த ஸ்டேட்டஸை பார்த்த  இளம்பெண்ணின் தோழி, தன்னைப்பற்றி தான் எழுதி ஸ்டேட்டஸாக  வைத்துள்ளதாக தவறாக புரிந்துகொண்டார். ஏனென்றால், லிலாவதியின் மகளுக்கும் அவரது தோழிக்கும் இடையே ஏற்கனவே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம், இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தொடர்பாக கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இளம்பெண்ணின் தாய் உள்பட குடும்பத்தினர் சிலர் லிலாவதி தேவியின் வீட்டிற்கு நேற்று வந்துள்ளனர். அங்கு இரு குடும்பத்தினரிடையே இது குறித்து பெரிய வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றவே, அந்த இளம்பெண்ணின் தாய் மற்றும் குடும்பத்தினர் லிலாவதி தேவி மற்றும் அவரின் குடும்பத்தினரை உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லிலாவதி, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின்னரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், இந்த வழக்கை  கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும், லிலாவதி தேவி மற்றும் அவரது குடும்பத்தினரை பலத்த ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடிய இளம்பெண்ணின் தாயார் உள்பட குடும்பத்தினர் 3 பேரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com