உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் 29 வயதுடைய பெண் பிரீத்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரீத்தி அவரது திருமணத்திற்கு முன்பு தனது தூரத்து சொந்தமான கில்லோ என்பவரை காதலித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் நாளடைவில் கில்லோ பல பெண்களுடன் பழகுவதை அறிந்த பிரீத்தி அவருடனான காதலை துண்டித்து பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கில்லோ அவர்கள் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் சில அந்தரங்க வீடியோக்களை வைத்து தொடர்ந்து பல வருடங்களாக பிரீத்தியை மிரட்டி வந்திருக்கிறார். மேலும் அந்த புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்றால் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கில்லோவின் கொடுமையை தாங்க முடியாத பிரீத்தி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி டெல்லியில் இருந்த கில்லோவிடம் போன் செய்து “தனிமையில் இருக்கலாம் ஹோட்டல் வா..” என கூறியுள்ளார்.
எனவே கில்லோ டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு வந்து மால்புரா பகுதியில் தாஜ்பத் ஹோட்டலில் அறை எடுத்து பிரீத்திக்கு தகவல் அளித்த நிலையில் வீட்டில் இருந்து கத்தி மற்றும் சுத்தியலை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து பீர் அருந்திய நிலையில் பிரீத்தி தனது பையில் இருந்த கத்தியை எடுத்து கில்லோவின் கழுத்தை அறுத்து சுத்தியலால் தலையில் உயிர் பிரியும் வரை 15 முறை அடித்து கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து கிலோவின் செல்போனையும் அடித்து நொறுக்கி விட்டு தான் கொலை செய்துவிட்டதாக ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மால்புரா காவல்துறையினர் கில்லோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பிரீத்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலனை பெண் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.