மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி தற்கொலை...

குஞ்சன் விளையில் தொழிலாளி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி தற்கொலை...
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி | நாகர்கோவில் அருகேயுள்ள குஞ்சன் விளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 32 இவர் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் மாடியில் நின்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலை குப்புற கீழே விழுந்த அவர் கழுத்து எலும்பு முறிந்து படுகாயம் அடைந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com