5 நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்...

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 5 நாட்களுக்குப் பிறகு நாகை மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்.
5 நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்...
Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த 30ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை நாகூர், பட்டினச்சேரி நம்பியார்நகர், செருதூர் காமேஷ்வரம். விழுந்தமாவடி ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட  25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள் 3000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு கடல் சீற்றம் குறைந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க மீன்வளத் துறையினர் அனுமதித்துள்னர்.

மேலும், மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700 விசைப்படகுகள் 3000 பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com