ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு...

ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு...

பர்கூர் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் நோய்த்தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Published on

கிருஷ்ணகிரி | பர்கூர் சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். ஆற்றில் கலக்கக்கூடிய கழிவுநீர் கோழி இறைச்சி பிளாஸ்டிக் பேப்பர் தேவையற்ற கழிவுகள் மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அங்கே வீசப்படுகிறது.

இதனால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணற்றுகளில் நீர் மாசு படுகின்றது ஆற்றின் மூலம் செல்கின்ற தண்ணீர் ஏரிகளில் போய் நிரம்புவதால் ஏரிகளில் உள்ள நீர்கள் நிலையை மிக மோசம் அடைகிறது.

இதன் காரணமாக ஆற்றில் கலக்கக்கூடியகழிவுநீர் பூமியின் நீர் நிலையை பாதிக்கும் அபாயம் உள்ளது எனவே இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது அப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது துரநாற்றம் விசி வருகிறது இதனால் டெங்கு மலேரியா கால் ராபோன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

ஆகையால் இது சம்பந்தமாக சுகாதாரத்துறை பேரூராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது. ஆற்றின் ஓரம் உள்ள விவசாயிகள் ஆற்றுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கமித்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com