“நள்ளிரவில் காணாமல் போன தாய் மற்றும் மகள்” - கிணற்றில் மிதந்த சடலங்கள்... குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்த கிருஷ்ணவேணியின் சகோதரர் தனது அக்கா மற்றும் அவரது மகள் வீட்டில் இல்லாததை...
“நள்ளிரவில் காணாமல் போன தாய் மற்றும் மகள்” - கிணற்றில் மிதந்த சடலங்கள்... குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தில் டில்லி என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவருக்கும் வாலாஜாபாத் அகரம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வருத்தம் அடைந்த கிருஷ்ணவேணி கணவனைப் பிரிந்து ஈச்சங்கரணை கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று வாழ்ந்து வந்திருக்கிறார்.

கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வாழ்ந்து வந்த கிருஷ்ணவேணி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல உணவருந்திய கிருஷ்ணவேணி வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் நன்றாக பேசி விட்டு உறங்க சென்ற நிலையில் நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்த கிருஷ்ணவேணியின் சகோதரர் தனது அக்கா மற்றும் அவரது மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். பின்னர் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகளை தேடி வந்திருக்கின்றனர்.

Admin

இந்நிலையில் அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றில் கிருஷ்ணவேணி சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் உடனடியாக திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் உடலை மீட்டனர் அதனை தொடர்ந்து கிணற்றில் மூழ்கியிருந்த சுபஸ்ரீயை நீண்ட நேரமாக தேடிய தீயணைப்பு துறையினர் கிணற்றின் இடுக்குகளில் சிக்கியிருந்த சுபஸ்ரீ உடலை இரண்டு மணி நேரத்திற்கு பின் மீட்டனர்.

அதனை தொடர்ந்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருக்கழுக்குன்றம் போலீசார் தாய் மற்றும் மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈச்சங்கரணை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com