கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை சிசிடிவி வைத்து போலிசார் வலைவீச்சு...

மயிலாடுதுறை இரண்டாம் நம்பர் புது தெரு ஸ்ரீமஹாகாளியம்மன் கோவில் வாசலில் உள்ள உண்டியலை உடைத்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை சிசிடிவி வைத்து போலிசார் வலைவீச்சு...
Published on
Updated on
1 min read

மயிலாடுதுறை | மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத் தெருவில் ஸ்ரீமகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள் இரும்புகம்பியால் நள்ளிரவு 2.30 மணிக்குஉடைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் வரவே மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டில் பதுங்கினர். தொடர்ந்து திருடியதில் பணத்தையும் காயின்களையும் முடிந்தளவு சுருட்டிக் கொண்டு தப்பி ஓடினர். திருடர்கள் பதுங்கிய இடத்தில் ஏராளமான காயின்களை விட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் கோயில் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்கோயிலில் உள்ள இந்த உண்டியல் ஐந்தாவது முறையாக உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com