டாஸ்மாக்கை மூடக் கோரி பொது மக்கள் முற்றுகை -பன்ருட்டியில் பரபரப்பு

டாஸ்மாக்கை மூடக் கோரி பொது மக்கள் முற்றுகை -பன்ருட்டியில் பரபரப்பு
Published on
Updated on
1 min read

பண்ருட்டி அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி யை அடுத்த கந்தன் பாளையம் பகுதியில்  புதியதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கடையை மூட வேண்டும் என்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கந்தன் பாளையம், கனிசப்பாக்கம், சித்ரசாவடி ஆகிய ஊரைச் சேர்ந்த மக்கள் இந்த வழியாக தினந்தோறும் பகுதியில் செல்வதாகவும், விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ள பகுதியில் கடை உள்ளதால்  நிலத்தில் வேலை செய்யும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத  சூழல் ஏற்படும் என்றும், மேலும் மது அருந்தும் பாட்டில்களை விவசாய நிலங்களில் குடிகாரர்கள் வீசி வருவதால் நிலம் பாழடைகிறது என்றும் பொது மக்கள் தெரிவித்தனர். 

உரிய நடவடிக்கையை விரைவில் எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com