19 வருட திரைப்பயணம்...ஸ்பெஷல் ஆக கொண்டாடிய படப்பிடிப்பினர்...!

நடிகை திரிஷாவின் 19 வருட திரையுலக பயணத்தை படப்பிடிப்பில் ஸ்பெஷல் ஆக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
19 வருட திரைப்பயணம்...ஸ்பெஷல் ஆக கொண்டாடிய படப்பிடிப்பினர்...!
Published on
Updated on
1 min read

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. தமிழில் ‘ஜோடி’ படம் மூலம் அறிமுகமாகி ‘மெளனம் பேசியதே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

இதனைதொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வெளியான படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தொடர்ந்து முன்னணியில் இருந்த நடிகை திரிஷா நடுவில் கொஞ்சம் மார்க்கெட்டில் சரிகினாலும், 96 படத்தின் மூலம் மீண்டும் ஜொலிக்க துவங்கினார்.

தற்போது, இவர் நடிப்பில் உருவான  கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்காக காத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகை திரிஷா திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளதால், படப்பிடிப்பின் போது அங்கிருந்தவர்கள் கேக் வெட்டி ஸ்பெஷல் ஆக கொண்டாடியுள்ளனர்.

இது குறித்து நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷாமாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ஒரு ஞானி ஒருமுறை என்னிடம் கூறினார், "விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள்" அதனால் நான் இந்த வேலையை செய்தேன். நான் இன்னும் விடுமுறையில் இருக்கிறேன்.

இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தவர்களுக்காக, நான் உன்னை ஒருபோதும் விடவில்லை, உங்கள் அனைவராலும் நான் இந்த இடத்தில்  இன்று இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி என திரையுலகிற்கு நன்றி தெரிவிக்குமாறு  நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com