திரையுலகில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அஜித் தனது மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திர மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள், விமர்சிப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரு நாணையத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களிடம் இருந்து அன்பையும், விமர்சிப்பவர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து கருத்தையும் ஏற்கிறேன். வாழு, வாழ விடு. என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் குமார் என தெரிவித்துள்ளார்.