
பிரதமர் இந்திராகாந்தியின் சர்வாதிகாரம், எமர்ஜென்சி என்ற பெயரில் இந்தியாவை சிதைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நம் தலைவர் ஆட்சியால் காப்பாற்றப்படுகிறோம் என கருணாநிதியின் ஆதரவாளராக பசுபதியின் காட்சி மூலம் அப்போதைய எமர்ஜென்சி எதிர்ப்பு போராட்டத்தை காட்டியிருக்கிறார். எமர்ஜென்சி சமயத்தில் ஒரு காட்சியில்.. "எப்பா கருணாநிதி மகனையே கைது பண்ணிட்டாங்களாம். பாக்சிங்கை நிறுத்துங்க" என்று முதல்வர் ஸ்டாலின் எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டதை கூட காட்டியிருக்கிறார்கள்.