பொழுதுபோக்கு
நரகாசூரன் திரைப்படம் ஆகஸ்டு 13-ல் ஓடிடியில் வெளியீடு.!!
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
துருவங்கள் 16 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த 2 வருடங்களாக வெளியாகாமல் இருந்தது, அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.
தற்போது வெளியீட்டு சிக்கல்களை சரி செய்து ஆகஸ்டு 13-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.