பிரியாமணியின் திருமணம் செல்லாது: முதல் மனைவி அதிரடி குற்றச்சாட்டு!

  நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது என அவர் கணவரின் முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரியாமணியின் திருமணம் செல்லாது: முதல் மனைவி அதிரடி குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

நடிகை பிரியாமணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் அறிமுகமான அவர் பிறகு பாலுமகேந்திராவின், அது ஒரு கனாகாலம், அமீரின் பருத்திவீரன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள த பேமிலிமேன் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் பிரியாமணியின் திருமணம் செல்லாது, அது சட்டவிரோதமானது என்றும் நாங்கள் முறையாக விவாகரத்து பெறவில்லை என்றும் முஸ்தபா ராஜின் முதல் மனைவி ஆயிஷா தற்போது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com