சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் செய்வார்! ரகசியத்தை உடைத்த பாலிவுட் நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

"நீங்கள் ஏதேனும் ஒரு கிரிக்கெட் வீரரை காதலிக்க விரும்புகிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு...
Suryakumar Yadav often sends me a messages Khushi Mukherjee
Suryakumar Yadav often sends me a messages Khushi Mukherjee
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுப் பிரபலமான குஷி முகர்ஜி, சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சூர்யகுமார் யாதவ் தனக்கு முன்னதாக அடிக்கடி குறுஞ்செய்திகளை (Messages) அனுப்பி வந்ததாகத் தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே காதல் மலர்வது அல்லது கிசுகிசுக்கள் எழுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தற்போது இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஒரு வீரர் குறித்து இவ்வளவு வெளிப்படையாக ஒரு நடிகை குற்றம் சாட்டியிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. செய்தியாளர் ஒருவர், "நீங்கள் ஏதேனும் ஒரு கிரிக்கெட் வீரரை காதலிக்க விரும்புகிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே குஷி முகர்ஜி இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய அவர், "எனக்கு எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் காதலிக்க விருப்பம் இல்லை. ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் எனக்கு முன்னதாக அடிக்கடி மெசேஜ் செய்வார். ஆனால் தற்போது நாங்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்வதில்லை. அவருடன் என்னை இணைத்துப் பேசுவதையும் நான் விரும்பவில்லை. இத்தகைய வதந்திகள் என் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நான் விரும்பவில்லை" என்று மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், நடிகை குஷி முகர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சூர்யகுமார் யாதவ் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே தேவிஷா ஷெட்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இத்தகைய சூழலில் நடிகை குஷி முகர்ஜி இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் உச்சத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குத் தயாராகி வருகிறார். 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராகவும், தற்போது அணியின் கேப்டனாகவும் இருக்கும் சூர்யகுமார் மீது எழுந்துள்ள இந்த புகார், அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது வெறும் விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட ஒன்றா அல்லது இதில் உண்மை ஏதும் உள்ளதா என்பது காலப்போக்கில் தான் தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com