உதயநிதி ஸ்டாலின் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள் 

சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள் 
Published on
Updated on
1 min read

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது சர்வதேச மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் கொடுத்து விருதுகள் கொடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு 11 வது பாராளுமன்ற உலகளாவிய ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அமெரிக்காவில் நடக்க உள்ளது. 

இதில் சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டத்திற்காக ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா மற்றும் படக்குழு நேரடியாக வந்து விருதை பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உலகெங்கிலும் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் சமுதாய ஆஸ்கர் விருது கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021 என்ற பிரிவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com