மராத்தா பிரவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி பிரமாண்ட பேரணி

மராத்தா பிரவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி பிரமாண்ட பேரணி
Published on
Updated on
1 min read

மராத்தா பிரவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் பீடில் மராத்தா பிரிவினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். மகாராஷ்டிரா அரசு அளித்த வாக்குறுதியின்படி இட ஒதுக்கீடு வழங்காததால் மக்களவைத் தேர்தலில் அம்மாநில அரசு கூட்டணிக்கு எதிராக அவர்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். இந்நிலையில் மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்த நிலையில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் தலைமையிலான எதிர்கட்சிகள் புறக்கணித்தன. இதனிடையே மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி மராத்தா இட ஒதுக்கீட்டு போராளி மனோஜ் ஜாரங்கே தலைமையில் மெகா பேரணி நடைபெற்றது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com