அதிகரிக்கும் கொரோனா பரவல்..! “மாஸ்க் முக்கியம் பிகிலு”

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது...
corona spreading in tamilnadu
corona spreading in tamilnadu
Published on
Updated on
1 min read

கடந்த 2019 -ஆம் ஆண்டு உலகையே ஆட்டுவித்த பெரும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி மக்களின் வாழ்வையே சிதைத்தது. இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கே 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் மெல்ல அதிக அதிகரிக்க தொடங்கியது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

  • பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்  என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் வேண்டும்.

  • உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டில் இருக்கவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

  • வெளியில் செல்லும்போதும் சென்றுவிட்டு வந்த உடனும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

  • தும்பும்போதும் இரும்பும்போதும் துணியை வைத்து முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

  • மக்கள் நிறைய தண்ணீர் அருந்தி, போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.

  • உடல்நிலை குறைவு ஏற்பட்டால் வீட்டிலே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் உடலில் னாய் எதிர்ப்பு திறன் குறைவாக இருந்தால் எளிதில் கொரோனா தொற்றில் சிக்க நேரிடும்.

  • வீட்டிலும் கதவு கைப்பிடிகள், மின் ஸ்விட்சுகள், போன்கள் என பொதுப்பயன்பாட்டு பொருட்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com