முகத்தில் அதிக பருக்கள் வருகிறதா? அழகு நிலையத்துக்குப் போகாமல் இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க!

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே, இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து நிரந்தரமான தீர்வைப் பெறலாம்.
pimples solution in tamil
pimples solution in tamil
Published on
Updated on
2 min read

இன்றைய இளம் வயதினருக்கு இருக்கும் மிகப் பெரிய கவலைகளில் ஒன்று, முகத்தில் வரும் பருக்கள் தான். பருக்கள் முகத்தின் அழகைக் குறைப்பதுடன், ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் கொடுக்கிறது. இந்த ஒரு ராத்திரியில் பருக்களை மாயமாக்க முடியாது என்றாலும், அதன் வீக்கத்தைக் குறைத்து, சிவந்த நிறத்தை மாற்ற முடியும். இந்த பருக்களைப் போக்க நீங்கள் அழகு நிலையத்துக்குச் சென்று காசை வீணாக்கத் தேவை இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே, இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து நிரந்தரமான தீர்வைப் பெறலாம். அதற்கு நீங்கள் மூன்று முக்கியமான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

முதல் விஷயம்: பனிக்கட்டியைப் பயன்படுத்துவதுதான். பரு வந்திருக்கும் இடத்தில், பனிக்கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, சுமார் பத்து வினாடிகள் அந்த இடத்தில் மெதுவாக ஒத்தி எடுக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். பனிக்கட்டி செய்வதால், பருக்களின் உள்ளே இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, பருக்களின் வீக்கம் குறையும். மேலும், பருக்களின் சிவந்த நிறமும் குறையும். இதனால், ஒரே இரவில் உங்கள் பருவின் வீக்கம் குறைந்து, அடுத்த நாள் காலையில் அது பெரிதாகத் தெரியாமல் மறைந்துவிடும்.

அடுத்து கற்றாழை ஜெல் பயன்படுத்துவது. கற்றாழை ஜெல் என்பது நம்முடைய சருமத்துக்கு ஒரு இயற்கை மருந்து. இதில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி சத்துக்கள், பருக்களை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்க உதவுகின்றன. மேலும், இது பருக்களால் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, சருமத்தைக் குளிர்ச்சியாக வைக்கிறது. நீங்கள் இரவு தூங்கப் போவதற்கு முன்பு, பரு வந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் கற்றாழை ஜெல்லை மெதுவாகத் தடவி, அப்படியே விட்டு விட வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்தப் பருவின் வீக்கம் குறைந்திருப்பதைக் காணலாம். நீங்கள் கெமிக்கல் கலக்காத சுத்தமான கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

மூன்றாவது, டீ ட்ரீ ஆயில் என்ற ஒரு எண்ணெயைப் பயன்படுத்துவது. இது கடைகளில் கிடைக்கும். இந்த டீ ட்ரீ ஆயில், பருக்களைப் போக்க ஒரு அற்புதமான இயற்கைப் பொருள். இதில் இருக்கும் சத்துக்கள், பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வேரோடு அழிக்க உதவுகின்றன. இந்த எண்ணெயை அப்படியே பயன்படுத்தாமல், ஏதாவது ஒரு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, பரு வந்த இடத்தில் மட்டும் மெதுவாகத் தடவ வேண்டும். தினமும் இரண்டு முறை இதைச் செய்தால், பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

இந்த மூன்று விஷயங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம், பருக்களை விரட்டலாம். அத்துடன், நீங்கள் முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது ரொம்பவே முக்கியம். வெளியில் சென்று வந்த பிறகு, முகத்தை நல்ல ஃபேஸ் வாஷ் போட்டு கழுவ வேண்டும். மேலும், அடிக்கடி உங்கள் கைகளால் பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. அப்படிச் செய்தால், அந்த இடத்தில் நிரந்தரமான தழும்பு வந்துவிடும். மேலும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், அதிக எண்ணெய் உள்ள உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்து, நிறைய தண்ணீர் குடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com