அடிக்கடி மொபைல் பார்ப்பவரா நீங்க? பார்வையை 10 மடங்கு கூர்மையாக்கும் தமிழர் வைத்தியக் குறிப்புகள்!

இந்த நவீனச் சவாலை நம்முடையப் பாரம்பரிய வைத்தியம் மூலம் எப்படிச் சமாளிப்பது என்று பார்ப்போம்.
sharpen eyesight tenfold
sharpen eyesight tenfoldsharpen eyesight tenfold
Published on
Updated on
1 min read

இன்றைய வாழ்க்கையில், கணினி, அலைபேசி திரையிலிருந்து நம்மால் தப்பிக்க முடிவதில்லை. இதனால், கண்களுக்கு அதிகமான வேலைப்பளு ஏற்பட்டு, பலருக்கும் 'கண் வறட்சி நோய்' போன்றப் பிரச்சினைகள் வருகின்றன. கண்ணில் தேவையான ஈரம் இல்லாமல் போனால், கண் சிவந்து, எரியும்; சில சமயம் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு சிறிய சோர்வு கூட மொத்த உடலையும் சோர்வடையச் செய்துவிடும். இந்த நவீனச் சவாலை நம்முடையப் பாரம்பரிய வைத்தியம் மூலம் எப்படிச் சமாளிப்பது என்று பார்ப்போம்.

தமிழர் மருத்துவத்தின்படி, நம் உடலின் உஷ்ணம் (பித்தம்) அதிகரிக்கும்போதுதான் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. தொடர்ந்து நாம் ஒரு திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கண் இமைக்கும் அளவு குறைந்துவிடுகிறது. கண்ணில் உஷ்ணம் அதிகரித்து, கண்ணீரும் வறண்டு போகிறது. கண் பார்வை சரியாக இருக்க வேண்டுமானால், உள் பித்தம் சமநிலையில் இருக்க வேண்டும்.

இந்த வறட்சியைச் சரிசெய்து, பார்வையை இயற்கையாகக் கூர்மையாக்கச் சில அருமையான வழிகள் உள்ளன. முதலில், கண்களுக்குக் குளிர்ச்சி தருவது. திரிபலா கஷாயம் என்று ஒரு பானம் உள்ளது. அதை வைத்துக் கண்களைக் கழுவுவது அல்லது ஒரு துணியில் நனைத்து கண்களின் மேல் ஒற்றி எடுப்பது கண்களின் எரிச்சலைக் குறைத்து, ஈரம் திரும்பக் கிடைக்க உதவும். இது கண்களில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கச் சிறந்த வழி.

இரண்டாவது சிகிச்சை, 'கண் நெய் சிகிச்சை' என்று சொல்வார்கள். அனுபவம் வாய்ந்த மருத்துவர் மேற்பார்வையில், கண்களைச் சுற்றி மாவு வைத்து ஒரு தடுப்பணை போலக் கட்டி, மூலிகை நெய்யை உள்ளே ஊற்றி கண்களைத் திறக்கச் சொல்வார்கள். இது கண்ணின் நரம்புகளுக்கு வலுவூட்டி, பார்வைத் திறனை மேம்படுத்தும்.

மூன்றாவதாக, உணவில் உள்ள கவனம். 'ஏ' உயிர்ச்சத்து நிறைந்த உணவுகள் கண்ணுக்கு மிக அவசியம். கேரட், கீரை வகைகள், முருங்கைக் கீரை போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். இதைத் தவிர, இரவில் உறங்கச் செல்வதற்கு முன், பாதாம், ஏலக்காய் மற்றும் கற்கண்டு இவற்றைச் சம அளவில் சேர்த்துப் பொடியாக்கி, ஒரு கரண்டிப் பாலுடன் கலந்து குடிப்பது கண்ணின் நரம்புகளுக்குப் பலம் தரும். வேலை செய்யும்போதே, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளை 20 விநாடிகளுக்குப் பார்த்துக் கண் சிமிட்டினால், கண் வறட்சி வராமல் தடுக்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com