இலங்கையில் இருந்து மீண்டும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை..!

இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து மீண்டும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை..!
Published on
Updated on
1 min read

இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனால் இலங்கையில் இருந்து இந்தியா தப்பிவரும் அகதிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். 2 குடும்பங்களை சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரைக்கு வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் மற்றும் ராமநாதபுரம் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 83 பேர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com